என்னால அப்படியும் நடிக்க முடியும்!! கவர்ச்சி ரோல் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை நயன் தாரா..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
அடக்கவுடக்கமாக நடித்து வந்த நயன் தாராவின் கரியரில் மிகமுக்கிய படமாகவும் அவரது மார்க்கெட்டை அதிகப்படுத்திய படமாகவும் அமைந்தது நடிகர் அஜித்தின் பில்லா படம். இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன் தாரா, நமீதா, பிரபு, சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் 2007 வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது பில்லா படம்.
தற்போது பில்லா படம் பல தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பில்லா படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், நடிகை நயன் தாரா பில்லா படத்தில் கவர்ச்சி ரோலில் நடித்தது குறித்து பேசிய விசயம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அப்படத்தில் , டூபீஸ் பிகினி ஆடையணிந்து நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.
அது குறித்து நயன் தாரா கூறுகையில், பில்லா படம் என்னுடைய வேறுமாதிரியான பரிமாணத்தை காட்டிய படம் என்றும் இந்த படத்தை நான் மறக்கவே மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு முன் கிராமத்தில் இருக்கும் பெண் ரோலில் நடித்துக்கொண்டிருந்தேன். முழு கவர்ச்சி ரோலில் நடித்த முதல் படம் பில்லா தான்.
அப்படி கிளாமரில் என்னை யாரும் பார்க்காததால் எப்படி அவர் இதற்கு சரியாவார் என்று யோசித்தார்கள். அப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமே இந்த மாதிரி கவர்ச்சியான கதாபாத்திரத்திலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க தான். அதனால் தான் பில்லா படத்தில் கவர்ச்சி ரோலில் நடித்ததாகவும் நயன் தாரா கூறியிருக்கிறார்.