கேரவனுக்கு போக சொன்னாங்க, நயன்தாரா இப்படி பண்ணுவாங்கனு எதிர்பாக்கவே இல்ல
யாரடி நீ மோகினி இந்த படத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படம்.
இந்நிலையில் இப்படத்தில் தனுஷை ஒரு தலையாக காதலிப்பவராகவும், நயன்தாரா தங்கையாகவும் நடித்தவர் சரண்யா மோகன். இவர் சமீபத்தில் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா உடன் நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
இதில், நயன்தாராவுடன் நான் நடித்த முதல் காட்சி எனக்கு மிகவும் காய்ச்சல் அடித்தது. அப்போது ஒரு ஓரமாக நான் அமர்ந்திருக்க, உடனே அங்கு நயன்தாரா வந்தார்.
என்ன ஆச்சு என்று கேட்டார், நான் காய்ச்சல் என சொல்ல, உடனே அவருடைய கேரவனுக்கே என்னை அனுமதித்து இங்கு ஓய்வு எடு என்றார்.
அதோடு சரண்யா காட்சி வந்தால் மட்டும் அவரை கூப்பிடுங்கள் என்றார், அவரெல்லாம் அப்படி செய்ய வேண்டுமென்றும் என்ற அவசியமே இல்லை, அவரின் செயல் பார்த்து பிரமித்தேன் என சரண்யா கூறியுள்ளார்.