உலகு, உயிர்-ஆல் தான் என் பலம்..தாய்மை குறித்து நடிகை நயன் தாரா ஓபன் டாக்..
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா.
பல சர்ச்சைகளையும் சந்தித்து வரும் நயன் தாரா, டாக்சிக் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். கடந்த இரு நாட்களில் நயன் தாரா நடிப்பில் டாக்சிக், Hi படம் ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில், பிரமோஷனுக்காக பேட்டியளித்த நயன்தாரா, வேலையையும், தாய்மையையும் சரிசமமாக கொண்டு செல்வது எளிதான விஷயம் கிடையாது, ஆனால் என் மகன்களான உயிரும், உலக்கும் எனக்கு பெரிய பலமாக இருக்கிறார்கள்.
அவர்களுடன் நேரத்தை செலவிடும் வகையில் என் வேலைகளை நான் திட்டமிடுகிறேன். குடும்பத்தின் ஆதரவும் முக்கியமானது, நான் என் மகன்களோடு இருக்கும்போது முழுமையாக அவர்களுடன் இருப்பதை மட்டுமே உறுதி செய்கிறேன். அதுதான் என்னை மனதளவில் நிலைத்திருக்க உதவி செய்கிறது என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.