திருமணத்திற்கு பின் வரிசைக்கட்டும் தோல்வி!! வேறுவழியில்லாமல் சாகசத்துக்கு தயாரான நடிகை நயன்தாரா..

Nayanthara Vignesh Shivan Gossip Today
By Edward Feb 29, 2024 03:45 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் காலெடி பதித்து மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்து வருகிறார் நடிகை நயன் தாரா, டெஸ்ட் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது மண்ணாங்கட்டி படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் அனைத்தும் போதிய வரவேற்பு பெறாமல் படுதோல்வியோடு பல கோடி நஷ்டத்தையும் ஏற்படுத்தியது.

அதில் அன்னப்பூரணி பட காட்சி சில சர்ச்சையாகி பிரச்சனையையும் ஏற்படுத்தியது. இதனால் நயன் தாரா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளாராம். அதாவது தரமான கதைக்களமாக இருந்தால் மட்டுமே நடிக்கலாம் என்றும் இல்லையென்றால் வேண்டவே வேண்டாம் என்று கூற முடிவெடுத்திருக்கிறாராம்.

திருமணத்திற்கு பின் வரிசைக்கட்டும் தோல்வி!! வேறுவழியில்லாமல் சாகசத்துக்கு தயாரான நடிகை நயன்தாரா.. | Nayanthara Ready To A Adventure Of This Situation

அதற்கு புள்ளையார் சுழியாக பல கதைகளை கேட்டு சல்லடை போட்ட நயன், இயக்குனர் துரை செந்தில்குமார் கதையை ஓகே செய்திருக்கிறார். சமீபத்தில் கூட சூரி, சசிகுமார் நடிப்பில் வெளியாகவுள்ள கருடன் படத்தின் இயக்குனர் தான் துரை செந்தில்குமார்.கருட்ன் படம் வெளியான பின் நயன் தாரா படமும் துவங்கவிருக்கிறது.

யானைக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையில் நடக்கும் பாசப்பிணைப்பை வைத்த கதையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் பல சாகசம் மட்டுமில்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளும் அமையவுள்ளதாம். இதன் மூலம் தன்னுடைய நம்பர் ஒன் இடத்தினை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனையோடு இருக்கிறாராம்.

ஏற்கனவே அடுத்தடுத்த டாப் நடிகர்களோடு தன் சாம்ராஜ்யத்தை ஆரம்பித்துள்ள நடிகை திரிஷா முன்னேறிக்கொண்டே இருக்கிறார். இதனால் நம் ஆட்டம் ஆடிப்போய் விடுமோ என்ற காரணத்தில் கதைகளை அலசி ஆராய்ந்து கமிட்டாகி வருகிறார் நயன் தாரா.