முத்தத்துக்காக நடந்த சண்டை!! ஷூட்டிங்கில் புருஷனை சைக்கோன்னு திட்டிய நயன் தாரா..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வட்டாரத்திலும் கால் பதித்துள்ள நடிகை நயன் தாரா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து பின் 2022ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களில் இரட்டை குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்து வளர்ந்து வருகிறார்.
இருவரின் காதலை நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் சீக்ரெட்டாக வைத்திருந்தனர். அந்த படத்தில் நடித்த நடிகை ராதிகாவுக்கே இவர்கள் விஷயம் தெரியாமல் வைத்திருந்தனர். அதை நடிகர் தனுஷ் தான் சொல்லி ராதிகாவுக்கே தெரியவந்துள்ளது.
ஒரே விட்டில் லிவ்விங் வாழ்க்கையை சில ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். அதுமட்டும் இன்றி அடிக்கடி ஜோடியாக விருதுவிழாவிற்கு செல்வதும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதுமாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்த போது, நயனுக்கும் விஜய் சேதுபதிக்கு ம் இடையே முத்தக்காடி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அதை மாற்றி கூட எடுத்துக் கொள்ளலாம் என்று நயன் தாரா விக்னேஷ் சிவனிடம் கூறினாராம். ஆனால் சீன் கரெக்டாக வரவேண்டும் என்று அந்த காட்சியை படமாக்கினார்.
அந்த சீனின் போது இன்னும் கிட்ட வாங்க, கிட்ட வாங்கன்னு விக்னேஷ் சிவன் சொல்லியிருந்திருக்கிறார். இதனால் டென்ஷனாக நயன் தாரா, விக்னேஷ் சிவன் அருகில் வந்து சைக்கோன்னு சொல்லி திட்டிவிட்டு சென்றிருக்கிறார். வேலையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் அப்படி செய்ததாக விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியொன்றில் இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.