நயன்தாராவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத காரணம் தான்.. உண்மையை உடைத்த பயில்வான்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, இயக்குனர் விக்னேச் சிவனை 7 வருடங்களாக காதலித்து வந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தாய்லாந்து ஹனிமூன், ஜவான் ஷூட்டிங் என்று இருந்த நயன், மீண்டும் ஸ்பெயின் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கணவருடன் சுற்றி ரொமான்ஸ் செய்து வந்தார்.

இரட்டை குழந்தை
திருமணமாகி 4 மாதமாகிய நிலையில் பல செய்திகள் நயன் தாரா - விக்னேஷ் சிவன் பற்றி வெளியாகி வைரலானது. அப்படி திடீரென தங்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்று குழந்தைகளின் காலை பிடித்து கொஞ்சியபடி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தா விக்னேஷ் சிவன். இதற்கு பலர் வாழ்த்துக்களை அறிவித்து வந்தாலும் விமர்சனங்களும் கூடவே வந்தது. விதிமுறைகளை படி விக்னேஷ் சிவன் - நயன் தாரா தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என்று பலர் கருத்துக்களை முன் வைத்து வந்தனர்.

பயில்வான்
இந்த சம்பவத்தை ஏற்கனவே நான் 7 மாதங்களுக்கு முன் கூறியிருந்தேன் என்று பயில்வான் கூறியது உண்மையாகிவிட்டது. நயன் தாராவிற்கு கிட்டத்தட்ட 40 வயதாகிய நிலையில், உடலில் சில பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துவரின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவுள்ளதாகவும் கூறினேன். அதேபோல் குழந்தை பெற்றுக்கொண்டால் வாய்ப்பு குறையும் என்றும் உடலில் வயதான தோற்றம் வந்துவிடும் என்ற பயத்திலும் இருந்துள்ளார். இதனால் நயன் தாராவால் குழந்தை பெத்துக்க முடியாது என்று தான் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றுக்கொண்டார் என்று பயில்வான் கூறியுள்ளார்.