திருமணமாகி குழந்தைகள் இருக்கும் போது விவாகரத்தா!! ஓரே புகைப்படத்தில் உறுதி செய்த நயன் தாரா - விக்னேஷ் சிவன்..
தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வரும் செய்தி நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளில் விவகாரம் தான். 7 வருட காதலுக்கு பின் ஜூன் மாதம் நயன் தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கரம் பிடித்தார்.

திருமணமாகி 4 மாதங்களுக்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார் நயன் தாரா. இதனால் பல சட்டச்சிக்கல் பிரச்சனைகளை கடந்து தற்போது குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள் நயன் - விக்கி. இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன் தாரா இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இணையத்தில் வெளிநாட்டில் நயன் தாரா தன் கணவர், இரட்டை குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் வெளியாகி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

மேலும் சமீபத்தில் தனியார் நிறுவனத்தின் உருவான குளிர்பான விளம்பரத்தில் கிளாமர் லுக்கில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார். இதனால் தான் விக்னேஷ் சிவன், நயன் தாராவை பிரியவுள்ளார் என்ற செய்தியும் இணையத்தில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் நடக்கவுள்ள FORMULA 1 STC GRAND PRIX 2024 நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றிருக்கிறார் நடிகை நயன் தாரா.


