பிரியங்காவால் நாசமாய்போன தொகுப்பாளினிகள் இத்தனை பேரா!! அவர் வைத்தது தான் சட்டம்...
விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளியாக ஆரம்பத்தில் பங்கேற்று தற்போது தொகுப்பாளினியாக மாறி பிரபலமானவர் மணிமேகலை. கடந்த சில சீசன்களில் குக் வித் கோமாளியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.
இந்த சீசனிலும் ரக்ஷனுடன் தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, திடீரென விலகிவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு காரணம் பிரியங்கா தேஷ்பாண்டே காரணம் என்று மறைமுகமாகி தாக்கி பேசியிருக்கிறார் மணிமேகலை.
தன்னுடைய வேலையில் பெரிய தொகுப்பாளினி மூக்கை நுழைத்தது முதல் சேனல் நிர்வாகத்திடம் கூறிய போது அவர்கள் என்னை சமாதானப்படுத்தி அவரிடம் மன்னிப்பும் கேட்க சொன்னார்கள், இல்லை என்றால் என் கேரியரே போய்விடும் என்று கூறியதால்ல் தன்மானம் முக்கியம் என்று வந்துவிட்டதாக கூறியிருந்தார்.
இதற்கு பலரும் பிரியங்கா குறித்து விமர்சித்தும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரியங்காவால் விஜய் டிவியில் பல தொகுப்பாளினிகள் காணமல் போயி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மணிமேகலைக்கு முன் அனிதா சம்பத், ஃபரினா, நக்ஷத்ரா, ஜாக்குலின், பவித்ரா உள்ளிட்டவர்கள் காணாமல் போனதற்கு பிரியங்கா தான் காரணம்.
மணிமேகலை சொன்னதுபோல் வாழு வாழவிடு என்று இணையவாசிகள் பிரியங்காவை கடுமையாக தாக்கி கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.