ராதிகா மகளாலும் நான் பட்ட கஷ்டம்..நான் தான் இளிச்சவாய்!! புலம்பிய நடிகை நிரோஷா...
நிரோஷா
தென்னிந்திய சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நிரோஷா. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பிஸியாக நடித்து வரும் நிரோஷா, மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் மகளாவார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய அக்கா ராதிகா மற்றும் அவருடைய மகள் குறித்து சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
நான் பட்ட கஷ்டம்
அதில், ஒருமுறை என் அக்கா மூக்கு குத்திக்கொள்ள போவதாக சொல்லி என்னையும் பார்லருக்கு கூட்டிச்சென்றார், நான் துணைக்குதான் போனேன், ஆனால் அங்கே ஒரு பெண்ணுக்கு மூக்கு குத்தும்போது அவள் வலியால் துடித்ததை பார்த்ததும் அக்கா பயந்துட்டாங்க. எனக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

உடனே நான் குத்திக்கொள்ள வரவில்லை என்று சொல்லப்போகும் முன், ஒழுங்கா உட்கார்ந்து குத்து என்று சொன்னார். பயந்துபோய் உட்கார்ந்தேன்.
கடைசியில் எனக்கு மட்டும்தான் மூக்கு குத்திவிட்டார்கள். அக்கா குத்தவே இல்லை. அம்மாவைப் போல் மகளும் அப்படித்தான். ஒருமுறை காதில் இரண்டாவது குத்து போடணும் என்று சொல்லி என்னை கூட்டிச் சென்றார்.

ஆனால் அங்கே போனதும் அவ குத்தவே இல்லை, என்னை மட்டும் உட்கார வைத்து குத்திவிட்டார்கள். எங்க வீட்டில் எல்லோருக்கும் நான் தான் இளிச்சவாய் போலம் என்னை வைத்துதான் டெஸ்ட் பண்ணுறாங்க என்று சிரிப்புடன் கூறியிருக்கிறார் நிரோஷா.