கல்யாணம் பண்ணாம குழந்தை பெத்துக்கலாம்!! சர்ச்சை பேச்சில் பிரபல நடிகை..
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், பேட்டியொன்றில் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்தும், திருமணமாகாமல், தாலிக்கட்டாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு குழந்தை பெத்துக்கலாம் என்று கூறி விஷயம் விமர்சனத்திற்குள்ளாகியது.

இதற்கு பலரும் தங்களின் கண்டனனங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை ஒருவர் திருமணமாகாமலும் குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த நடிகை வேறு யாருமில்லை நடிகை நித்யா மேனன் தான். 37 வயதாகும் நடிகை நித்யா மேனன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

நித்யா மேனன்
சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியொன்றில், உங்களுக்கு குழந்தைகள் வேண்டும் என்பதற்காக நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கென அறிவியல் முறைகள் உள்ளன.
பலர் இதுபோல் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளனர் என்று சில வருடத்திற்கு முன் கூறியது தற்போது வைரலாகி வருகிறது. திவ்யா சத்யராஜை தொடர்ந்து இந்த கருத்திற்கு நித்யா மேனனை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.