பிரைவசி கொடுங்க...விவாகரத்து செய்தியால் மனமுடைந்த நடிகை மெளனி ராய்..

Bollywood Indian Actress Divorce Actress
By Jai May 13, 2026 09:30 AM GMT
Report

மெளனி ராய்

நாகினி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவர் கடந்த 2022ல் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரைவசி கொடுங்க...விவாகரத்து செய்தியால் மனமுடைந்த நடிகை மெளனி ராய்.. | No False Narrative Give Us Privacy Mouni Roy

சூரஜ் கேரளாவை சேர்ந்த மலையாளி என்பதால் திருமணம் பெங்காலி மற்றும் மலையாளி ஆகிய இரண்டு முறைப்படியும் நடந்தது. திருமணம் முடிந்து தற்போது நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

மௌனி ராய் தனது கணவர் சூரஜ் நம்பியாரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ(Unfollow) செய்துவிட்டார் என்பதுதான் அது. அவரது கணவரும் மௌனி ராயை பின்தொடரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரைவசி கொடுங்க

அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், மெளனி ராய் முதன்முறையாக வதந்திகளுக்கு பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அதில், தயவுசெய்து வதந்திகளை சோசியல் மீடியாக்கள் பரப்பாதீர்கள். எங்களுக்கு பிரைவசி கொடுங்கள் என்று ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.

Gallery