நோ சொன்ன சமந்தா!! ஐட்டம் பாடலுக்கு 30 வயது நடிகையை தட்டித்தூக்கிய பிரபல இயக்குனர்..
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 2021ல் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்திருந்தார். படம் வெளியாக 370 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றது.
இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க காரணமாக இருந்த நடிகை சமந்தாவின் ஊ சொல்றியா பாடலுக்கு குத்தாட்டம் போட்டது தான். 5 நிமிட பாடலுக்கு 5 கோடி சம்பளமாக பெற்று படுமோசமான முகபாவனையில் ஆட்டம் போட்டிருந்தார் சமந்தா.
தற்போது புஷ்பா 2 படம் உருவாகி வரும் நிலையில், சமீபத்தில் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைதொடர்ந்து புஷ்பா 2 படத்தின் Sooseki என்ற இரண்டாம் சிங்கில் வரும் 29 ஆம் தேதி 11.7 நிமிடத்திற்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. சமந்தா, ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் மேலும் ஒரு நடிகையின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அனிமல் படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி நடித்த 30 வயது நடிகை திரிப்டி டிம்ரி அந்த ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போடவுள்ளாராம். இந்த தகவல் வெளியாகி அல்லு அர்ஜுன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.