பாவனியுடன் முத்தம் கொடுக்க ரிசெர்ஜ் செய்ய ஆசைப்பட்ட அமீர்.. பிரியங்காவால் ஷாக்கான மாகாபா..
பிரபல வானொலியில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி பிரபலமானவர் மாகாபா ஆனந்த். இதன்பின் பிரபல தொலைக்காட்சியில் அதுஇதுஎது என்ற நிகழ்ச்சியை சிவகார்த்திகேயனுக்கு அடுத்த அந்த இடத்தினை பிடித்தார்.
இந்நிகழ்ச்சி மூலம் தன் திறமையை நிரூபித்து அடுத்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல பெண் தொகுப்பாளினிகளுடன் பணியாற்றிய மாகாபா தற்போது விஜே பிரியங்காவுடன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இருவரும் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சிக்கென்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது இருவரும் இணைந்து ஊ சொல்றியா ஊஊ சொல்றியா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
கடந்த வாரம் அமீர் - பாவனி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரியங்கா இருவருடன் சேர்ந்து அட்டகாசம் செய்துள்ளார். அப்போது 24 நிமிட தொடர் முத்தமிட்ட கின்னஸ் சாதனை பற்றிய கேள்வி கேட்ட பிரியங்காவிடம் நாங்கள் ரிசெர்ஜ் செய்து பாக்கவா என்று அமீர் கேட்டுள்ளார்.
இதனால் மாகாபா ஷாக்காகி எங்க போய் பண்ணுவீங்க என்று கலாய்த்துள்ளார். இதற்கு பிரியங்கா இங்கேவா இல்ல வீட்டுக்கு போய் பண்றீங்களா என்று கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் இந்த வேலையை விடவே மாட்டியா பிரியங்கா என்று கலாய்த்துள்ளனர்.