யாரு கண்ணு பட்டுச்சோ! அதிமுக ஓபிஎஸ் - ஈபிஎஸ் சண்டையை கலாய்க்கும் நெட்டிசன்கள்..
தமிழக அரசியலில் தற்போது பூதகரமாக வெடித்து வருகிறது அதிமுக கட்சியின் ஒற்றைத்தலைமை. 23 மூன்று தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்ற திட்டமிட்டப்பட்டிருந்த நிலையில் அது எதையும் ஏற்றுக்கொள்ளாமல் பொதுக்குழு நிராகரித்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக ஓபிஎஸ்-ஐ ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாகி தாக்கியும் பேசியும் வந்தனர். இதனை பொதுக்குழுவிலும் ஓபிஎஸ்க்கு எதிராக கூக்குரலிட்டு கோஷமிட்டு வந்தனர்.
தீர்மானத்தை ஏற்க முடியாது என்று அதிகப்படியான ஆதரவை ஈபிஎஸ் குழு பெற்றது. இதனால் ஓபிஎஸ் மேடையை விட்டு வெளியேறி அவமானப்படுத்தப்பட்டார். இப்படி கட்சியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டதை மற்ற கட்சியினர் காமெடியாக விமர்சித்து பேசி வந்தனர்.
இதனை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் தன் கடமைக்கு கலாய்த்து வருகிறார். அப்படி ஆட்சியில் இருந்த போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஒன்றாக இருந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை பகிர்ந்து யாரு கண்ணு பட்டிச்சோ என்று கலாய்த்துள்ளார்.
இதற்கு பலர் உங்களை போன்றவர்களின் கண் தான் பட்டிருக்கும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
எப்படி இருந்தாங்க. யாரு கண்ணு பட்டுச்சோ pic.twitter.com/JoAqQLwdy8
— Savukku_Shankar (@savukku) June 24, 2022