ஜாதியை தூண்டுகிறாரா பிரபல இயக்குநர்! அதுவும் சூர்யா படத்தை வைத்த கருத்துதான் இப்படி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் சூரரை போற்று படம் வெளியாகி தற்போது உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையடுத்து வாடி வாசல் படத்தின் டைட்டில் வெளியாகியதை தொடர்ந்து, இரு படங்களில் கமிட்டாகி நடிக்க இருக்கிறார் நடிகர் சூர்யா. 23ல் சூர்யாவின் பிறந்த நாளன்று இரு படங்களான எதற்கும் துணிந்தவர், ஜெய்பீம் படத்தின் போஸ்டர் வெளியிட்டார் நடிகர் சூர்யா.
படத்திற்கு தலைப்பு நன்றாக இருக்கிறது என்று பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறியதை அடுத்து இயக்குநர் பா ரஞ்சித் ஜெய்பீம் படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார். சூர்யாவின் பிறந்தநாளன்று சூர்யாவுக்கு கூட பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் ஜெய்பீம் படத்தை மட்டும் பேசியது கேவலமானது எனவும் சூர்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
#JaiBhim Vazthugal @Suriya_offl & team 😊🌸😍 https://t.co/C2l4Uw5qZ8
— pa.ranjith (@beemji) July 23, 2021
தமிழ்நாட்டில் அனைத்து தலைவர்களும் மக்களுக்காக தான் போராடி உள்ளனர். ஆனால் மற்ற தலைவர்கள் யாரையுமே ரஞ்சித் இதுவரை பெருமையாக ஒரு வசனம் கூட வைத்ததில்லை. இதிலேயே தெரிகிறதா ரஞ்சித் ஒரு ஜாதி வெறி பிடித்தவர் என்று கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் இதுவரை ஒரு படத்தில் கூட அம்பேத்கரை தவிர மற்ற எந்த தலைவரையும் குறிப்பிட்டு காட்டவில்லை ரஞ்சித் என பலரும் கூறி வருகின்றனர். ஜாதியை மறந்து ஒன்று கூடி வருகின்றனர் ஆனால் படத்தில் அவ்வப்போது வசனங்களை வைத்து மீண்டும் ஜாதியை பெருமைபடுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக ரஞ்சித் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர், மேலும் இனிமேலாவது அனைவரும் ஒன்று கூட வேண்டும் என பா ரஞ்சித் நினைத்தால் அம்பேத்கரை பற்றி மட்டும் பேசாமல் மற்ற தலைவர்களை பற்றியும் பா ரஞ்சித் பேச வேண்டும் பெருமையாக படங்களை எடுக்க வேண்டும் என்று சாடி வருகிறார்கள்.