மாணவர் போராட்டம் குறித்து சர்ச்சையான கருத்து!! பேர்லே மானிவை வாய் அடைக்க வைத்த பிரபலம்..
பேர்லே மானி
சினிமா நட்சத்திரங்களை தன்னுடைய தனித்துவமான பேச்சுக்களால் பேட்டியெடுத்து பிரபலமானவர் தான் பேர்லே மானி. பட பிரமோஷன்களுக்கு பிரபலங்களை பேட்டியெடுத்து வரும் பேர்லே மானே, ஒரு அதிர்ச்சிகரமான ஒரு பதிவினை சோசியல் மீடியாகளில் பகிர்ந்துள்ளார்.
நீட் தொடர்பான ஒரு பதிவினை போட்டதால் பிரச்சனை அவருக்கு ஆரம்பமாகியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, வீட்டுக்கு திரும்பி செல்லுங்கள்.

எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு உயிரை இழப்பது மதிப்புக்குரியது அல்ல. ஒவ்வொரு மாணவரும் யாருடையதோ குழந்தை. யாருடையதோ கனவு. யாருடையதோ முழு உலகமும். இந்த இயக்கத்தின் உண்மையான நோக்கம் ஒருபோதும் மங்கிவிடாது என்று நம்புகிறேன் என்று பேர்லே மானே தெரிவித்திருக்கிறார்.
இதற்கு அவரை விமர்சித்து கருத்து பகிரப்பட்டு வந்த நிலையில், தன்னுடைய பேச்சு சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களே தன்னை விமர்சிப்பதாகவும் தன்னை விமர்சித்த இயக்குநரை தோல்வியடைந்த திரைப்பட இயக்குநர் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேர்லே மானி.

மேலும் தன்னுடைய கருத்துகளை காரமாக்குவதற்காக மிளகாய்த்தூள், அஜினோமோட்டோ சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியக் கோடியிலுள்ள காவி நிறம் தனக்கு பிடிக்கும் என்பதால், காவி தன்னுடைய விருப்பமான நிறம் எனவும் கூறியிருக்கிறார். இந்தக் கருத்தும் அரசியல் ரீதியாகப் பார்ப்பட்டு சோசியல் மீடியாகளில் விவாதத்தை ஏற்படுத்தியது.
சிபி மலையில்
இதனிடையே சிபி மலையில் தந்தையும் தேசிய விருது பெற்ற இயக்குநருமான சிபி மலையில் தோல்வியடைந்த இயக்குநர் என்று குறிப்பிட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். தன்னுடைய தந்தையை விமர்சித்த பேர்லேவுக்கு ஜோ மலாயில் மகன், யாருகிட்ட பேசுறன்னு தெரிந்து பேசு என்று பேர்லே மானிவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்த சண்டை மலையாள சினிமாவில் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் சைலெண்ட் மூடுக்கு சென்றுவிட்டார் பேர்லே மானே.