மன்சூர் அலிகான் விவகாரத்தில் வாய்க்கொடுத்து மாட்டிக்கொண்ட நடிகை திரிஷா.. போலிஸ் எடுத்த முடிவு..
தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாத காலமாக பெரியளவில் பேசப்பட்டு வந்த சம்பவம் தான் மன்சூர் அலிகான், திரிஷாவை பற்றி பேசிய விசயம் தான். மன்சூர் அலிகான் அப்படி பேசியதை கண்டித்து நடிகை திரிஷா எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார்.
இது பெரியளவில் வெடித்ததால், பல நடிகை, நடிகர்கள் திரிஷாவுக்கு ஆதரவாகவும் மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் சென்று மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர்.
இதன் அடிப்படையில் இரு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்தப்பின் மன்சூர் அலிகானை ஆஜராகினார். அதன்பின் திரிஷாவின் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டும், திரிஷா அதற்கு தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வ குணம் என்று கூறிருந்தனர்.

ஃபுல் போதையில், முற்றிப்போய் டான்ஸ் ஆடி நீ என்ன கண்ணகி வீட்டு.. திரிஷாவை வெளுத்து வாங்கிய பயில்வான்..
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகானின் பதில்களின் அடிப்படையில், காவல்துறையினர் நடிகை திரிஷா தரப்பில் விளக்கத்தை கேட்டு கடிதத்தை சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்துப்பூர்வமாக திரிஷாவிடம் விளக்கம் கோரி அனுப்பியதால் இதெல்லாம் தேவையா என்று நெட்டிசன்கள் திரிஷாவை கலாய்த்து வருகிறார்கள்.