பாக்யராஜை திருமணம் செய்வதற்கு முன் அந்த நடிகருடன் காதல்!! நடிகை பூர்ணிமா ரகசியத்தை கூறிய பிரபலம்
சினிமா பிரபலங்களின் ரகசியங்கள் மற்றும் அந்தரங்க விஷயங்களை பற்றி பல பத்திரிக்கையாளர்கள் வெளிப்படையாக பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை மைக் மோகன் மற்றும் பூர்ணிமாவின் காதல் பற்றிய ரகசியத்தை பகிர்ந்துள்ளார். அதில், நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் மூலம் மோகன் அறிமுகமாகி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் போன்ற படங்கள் பெரிய இடத்தினை கொடுத்தது.
இந்த படத்தில் நடிகை பூர்ணிமா ஜெயராம் நடித்திருந்தார். அப்போது பாக்யராஜை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். அப்படி மைக் மோகனும் பூர்ணிமாவும் சேர்ந்து நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ராசியான ஜோடி என்று கூறும் அளவிற்கு அவர்களது கெமிஸ்ட்ரி இருந்தது. இருவரும் ஏறக்குரிய ஹீரோயினுடன் பழகுவது போல் தான் பழகினார்.
இருவருக்கும் இடையே காதல் இருந்தது, பழகினார்கள், கிசுகிசுக்களும் வந்தது. ஒருமுறை பாக்யராஜ் சொன்னார், பால்ம்குரோவ் ஹோட்டலில் தான் மோகன் இருப்பார். எல்லா கலைஞர்களும் அங்கே தான் இருப்பார்கள், அனைத்துவித டிஸ்கஷனும் அங்கு தான் இருக்கும்.
அங்கு மோகன், அவரது காரின் முன்புறம் பூர்ணிமா தோல் மீது கைப்போட்டபடி உட்கார்ந்திருந்தார். இதனை பார்த்த பாக்யராஜ், என்ன களிகாலம், இங்கெல்லாம் ஹீரோயின் இப்படி பேசிட்டு இருந்தால் என்ன ஆகுறது என்று சொன்னார்.
பின் இருவரும் ஜோடி சேர்வார்கள் என்று தெரியாது. ஆனால் அப்போது மோகனை பூர்ணிமா விரும்பினார்கள். வெள்ளிவிழா ஹீரோவாக இருந்ததால் பூர்ணிமா விரும்பினார். ஆனால் மோகன் நடிகைகளுடன் எப்படி பழகுகிறோமோ அப்படி தான் இருந்திருக்கிறார்.
அந்த ஒரு கோபம் பூர்ணிமாவுக்கு இருந்தது. அதன்பின் சில செயல்களால் பூர்ணிமா அவரை பழிவாங்கினார். அதன்பின் மோகனின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது என்று சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.
அந்த சமயத்தில் பாக்யராஜ் வேறொரு நடிகையை திருமணம் செய்திருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது தான் டார்லிங் டார்லிங் படத்தின் போது பூர்ணிமா மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்தார். மனைவிக்கு துரோகம் செய்தார் என்று கூட விமர்சனங்கள் பாக்யராஜ் மீது எழுந்தது.