நடிகையா ஆகணுமா, அப்போ என் கூட பண்ணு.. பாலா படத்தில் இருந்து பிரகதி விலக இதுதான் காரணமா?
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் பிரகதி குருபிரசாத். சூப்பர் சிங்கர் ஷோ மூலமாக கிடைத்த புகழைக் கொண்டு அவர் சினிமாவிலும் பாடத் தொடங்கினார்.
இதுவரை இவர் தமிழில் 15க்கும் அதிகமான பாடல்களைப் பாடி இருக்கிறார். பிரகதி முன்னதாக பாலா இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரகதி, பாலா படத்தில் இருந்து வெளியேறியது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பாலா சார் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்தார். என்னை பார்த்தவுடன், நடிப்பதற்கான தகுதியும், உடல்வாகுவும் இருக்கு. ஆனால் என்னுடைய படத்தில் தான் முதலில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்.
ஆனால், அந்த படம் தாரை தப்பட்டை படம் கிடையாது. அந்த படம் வெறொரு படம். அதன் பின் அவருடைய படத்தில் கமிட் ஆனேன் ஆனால் அந்த படம் கை கூட வில்லை. அந்த படத்திற்கு பின் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் வெளிநாட்டுக்கு சென்ற பிறகு ஹாலிவுட்டில் இருந்து மூன்று ஆபர்கள் வந்தது. நான் நடிப்பு கற்று சில சீரியல்களிலும் நடித்தேன் என்று பிரகதி தெரிவித்துள்ளார்.