விஜய்யின் கோட் படத்துல நடிக்க காரணமே அவங்க தான்!! கூலாக பதிலளித்த நடிகர் பிரசாந்த்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பிரசாந்த் தற்போது விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய ரோலில் நடித்து பிரசாந்த், கடந்த 2019ல் தன்னுடைய அப்பாவும் இயக்குனருமான தியாகராஜன் அவர்களால் இயக்கப்பட்டுள்ள அந்தகண் படத்தில் நடித்துள்ளார். 5 ஆண்டுகளாக இப்படம் வெளியாகாமல் முடங்கி இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அந்தகண் படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தகண் படத்தின் சார்ப்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய பிரசாந்த், சில கேள்விகளுக்கு கூலாக பதிலளித்துள்ளார். அதில் விஜய்யின் கோட் படத்தில் நடிக்க என்ன காரணம் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரசாந்த், ராஜு சுந்தரம் மாஸ்டரும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் தான் காரணம்.
இந்த பிரஸ் மீட்டில் என்னுடைய சகோதரர் விஜய்க்கும் பிரபு தேவா மாஸ்டருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் பண்ண காரணமே, மூணு பேருமே ஒரே சீனில் டான்ஸ் ஆட வேண்டும் என்று வெங்கட் பிரபு சென்னது தான்.
மூணு பேரும் என்ஜாய் செய்து டான்ஸ் ஆடினோம் என்று கூறியிருக்கிறார். நான் மல்டி ஸ்டார் படம் ஏற்கனவே பண்ணி இருக்கிறேன். இந்த படம் அப்படி எனக்கு வெங்கட் பிரபுவாலும் ஏஜிஎஸ் நிறுவனத்தாலும் கிடைத்துள்ளது. இதை ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவார்கள் என்று பிரசாந்த் தெரிவித்துள்ளார்.