45 வயசுல 22 வயசு பொண்ணு!! பிரேம்ஜி பற்றிய ரகசியத்தை உடைத்த பிரபலம்..
45 வயதை தாண்டியிருக்கும் பிரேம்ஜி, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். சரக்கு பார்ட்டி என்று தன்னுடைய நண்பர்களுடன் நாட்களை கழித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விட்டும் வருகிறார்.நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு வரும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.
இந்து என்பவருடன் ஜூன் 9 ஆம் தேதி இருவருக்கும் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளது என்று திருமண அழைப்பிதழ் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. வைரலாகும் பத்திரிக்கையில் பிரேம்ஜியின் பெரியப்பா இளையராஜாவின் பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் பிரேம்ஜி திருமணம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. பிரேம்ஜி அண்ணன் வெங்கட் பிரபுவிடமும் நான் கேட்ட போது, சிம்பு கல்யாணம் முடிந்தப்பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரேம்ஜியும் நடிகர் ஜெய்யும் கூறியிருந்தார்கள். சமீபத்தில் கூட கேட்கும் போது எனக்கே தெரியவில்லை என்று கூறினார் வெங்கட் பிரபு.
ஏற்கனவே ஒரு நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டார். பிரேம்ஜி கல்யாணம் செய்யப்போகும் அந்த பாடகி 22 வயது வினைதா சிவக்குமார் என்றும் கிட்டத்தட்ட 23 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்ய இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இப்போது சேலத்து பெண்ணை கல்யாணம் செய்யப்போகிறார். சம்மந்தம் இல்லாம் எப்படி சேலத்து பெண்ணை கல்யாணம் செய்யப்போகிறார்.