ஒரு நைட் தான் இங்கே இருந்தார்.. ஒரேவொரு நாள் வருங்கால கணவரால் கண்ணீர் விட்டு அழுத பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Gossip Today Tamil Actress
By Edward Feb 25, 2024 11:45 AM GMT
Report

மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகினார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரை நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர், படங்களில் வாய்ப்பு பெற்று தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

ஒரு நைட் தான் இங்கே இருந்தார்.. ஒரேவொரு நாள் வருங்கால கணவரால் கண்ணீர் விட்டு அழுத பிரியா பவானி சங்கர்.. | Priya Bhavani Shankar Emotional Talk Her Boyfriend

இந்தியன் 2, டிமாண்டி காலணி 2, ரத்னம், ஜெப்ரா, பீமா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். பல ஆண்டுகளாக காதலித்து வரும் ராஜ் வேல் என்பவருடன் ரொமான்ஸ் செய்தும் அவுட்டிங் சென்றும் வரும் பிரியா பவானி, சமீபத்தில் ஆஸ்திரியா நாட்டிற்கு சென்று காதலரின் பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.

தற்போது காதலர் தினத்தன்று பிப்ரவரி 14 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்துக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடி அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் காதலர் ராஜ்வேல் குறித்து எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.

ஒரு நைட் தான் இங்கே இருந்தார்.. ஒரேவொரு நாள் வருங்கால கணவரால் கண்ணீர் விட்டு அழுத பிரியா பவானி சங்கர்.. | Priya Bhavani Shankar Emotional Talk Her Boyfriend

அதில், ராஜ் வேல் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த போது என்னை பார்க்க வருவதற்காக 4 மாசம் பார்ட் டைமில் வேலை செய்து வந்தார். அப்படி கிடைத்த காசை சேர்த்து என் பிறந்தநாளுக்கு இந்தியா வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

ஒரேவொரு நைட் மட்டும் இங்கே இருந்து அடுத்த நாளே வெளிநாட்டுக்கு மீண்டும் கிளம்பிவிட்டார். 4 மாசம் சம்பாதித்த காசு பிளைட் டிக்கெட்டுக்கே சரியா போய்விட்டது, அவ்வளவு கஷ்டப்பட்டு என்னை பார்க்க வந்தார் என்று எமோஷ்னலாக கண்ணீர் விட்டு அழுது பேசியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

You May Like This Video