அந்த நடிகருடன் லிப்லாக் பண்ண ஓகே தான்!! கூச்சமில்லாமல் பதிலளித்த நடிகை பிரியா பவானி சங்கர்..
மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகினார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரை நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர், படங்களில் வாய்ப்பு பெற்று தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்தியன் 2, டிமாண்டி காலணி 2, ரத்னம், ஜெப்ரா, பீமா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
பல ஆண்டுகளாக காதலித்து வரும் ராஜ் வேல் என்பவருடன் ரொமான்ஸ் செய்தும் அவுட்டிங் சென்றும் வரும் பிரியா பவானி, சமீபத்தில் ஆஸ்திரியா நாட்டிற்கு சென்று காதலரின் பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். தற்போது காதலர் தினத்தன்று ஸ்விட்சர்லாந்துக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடி அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கதைக்காக அமையும் லிப்லாக் காட்சியில் யாருடன் நடிக்க சம்மதிப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
சற்று யோசித்தப்பின் சிரித்தபடியே, எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லு அர்ஜுனுடன் தான் அப்படி நடிப்பேன். சினிமாவில் தேவைப்படும் ரொமான்ஸ் காட்சி என்றால் அவருடன் லிப்லாக் காட்சியில் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.