அப்படிப்பட்ட பெண் நான் கிடையாது.. உண்மையை உடைத்த நடிகை பிரியா பவானி சங்கர்
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் சிறப்பான தன் நடிப்பை வெளிப்படுத்திய நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வெள்ளித்திரையில் டாப் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருகிறார்.
மேயாத மான் படத்தில் ஆரம்பித்து தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலணி2 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய நீண்டநாள் காதலர் ராஜ்வேல் என்பவருடன் வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று நெருக்கமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் ஸ்மார்ட்டான பெண், சென்சிட்டிவ்வான பெண், மிகவும் அறிவான பெண் என்று கூறி, உடனே இல்லை இல்லை அறிவான பெண் என்று என்னை கூறுவது சரியாக இருக்காது. எப்போதும் எனக்கு சரி என்று நினைக்கக்கூடிய என் மனதிற்கும் என் மூளைக்கும் சரியாக இருக்கும் முடிவுகளை செய்து தான் எல்லாமே செய்கிறேன்.
ஒரு முடிவை எடுத்துவிட்டு அது சில நேரங்களில் ஏன் இதை செய்தோம் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான முடிவை எடுத்துவிட்டோம் என்று நான் வருத்தப்பட்டது உண்டு. அதனால் தான் நான் அறிவான பெண் என்று கூறுவதைவிட பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கும் பெண் என்று எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார். நடிகை பிரியா பவானி சங்கர்.