தலையில் தூக்கி வெச்சு ஆடிய ராகவா லாரன்ஸ்!! கோடியில் புறளும் நடிகை பிரியா பவானி சங்கர் ரகசியம்..
சின்னத்திரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த பிரியா, மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
லட்சத்தில் சம்பளமாக பெற்று பல படங்களில் நடித்து பிரபலமான பிரியா பவானி சங்கர், சமீபத்தில் ஈ சிஆரில் பங்களா வாங்கியும் அதன் அருகிலேயே ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பித்தும் இருந்துள்ளார். இதனால் அவர் சமீபகாலமாக விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டார்.
அவர் நடிப்பில் சமீபத்தில் பத்து தல படம் வெளியாகி நல்ல வரவேற்பு கொடுத்தது. அதற்காக பிரியா பவானி சங்கருக்கு 70 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள ருத்ரன் படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கருடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக மேடையில் கூறியிருந்தார்.
அப்படி அவரை புகழ்ந்து தள்ளியதோடு மட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸில் பேச்சில் தலையில் தூக்கி வைத்து ஆடும் அளவிற்கு இருந்ததாக விமர்சிக்கப்பட்டது.
அதன் பயனாக பிரியா பவானி சங்கருக்கு ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்திற்கு ஒரு கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ஏற்கனவே பணம் சம்பாதிக்கத்தான் சினிமாத்துறைக்கு வந்தேன் என்று கூறியிருந்த பிரியா பவானி சங்கர் தற்போது கோடியில் சம்பளம் வாங்கி புறண்டு வருகிறார். இனிமேல் அவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு கோடியில் சம்பளத்தை உயர்த்தினாலும் சந்தேகமில்லை.
