அவருடன் டேட்டிங் செல்வது ரொம்ப கஷ்டம்! காதலுக்கு இப்படியொரு துரோகம் செய்யும் நடிகை பிரியாபவானி சங்கர்..
மேயாத மான் படத்தின் கதாநாயகியாக அறிமிகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் வேறொரு சேனலில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.
கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகை சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்பினை பெற்று வருகிறார். சமீபத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் தொடர்ந்து இரு படங்களிலும் நடித்திருந்தார். தற்போது அசோக் செல்வனுடன் ஜோடி போட்டு ஹாஸ்டல் படத்தில் நடித்தார்.
இந்நிலையில் ஏற்கனவே 10 வருடங்களாக காதலித்து வரும் ஆண் நண்வருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார். தற்போது டேட்டிங் செல்வது குறித்து சமீபத்தில் இணையத்தில் ஒரு கருத்தினை போட்டுள்ளார்.
நேச்சுரலான மனநிலையில் இருக்கும் நண்பர்களுடன் டேட்டிங் செல்வது மிகவும் கடினமான செயலாக இருக்கும். அதாவது சண்டை வந்தார் உடனே மன்னிப்பு கேட்டுவிடுவார்கள்.
அந்த கோபத்தை வைத்து நான் என்ன செய்வது என்று பதிவிட்டுள்ளார். காதலர் இருக்கும் போது இப்படியான கருத்தினை கூறுகிறாரே என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.