எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்? பிரபல நடிகை பிரியாமணிக்கு ஏற்பட்ட விபரீதம்..

actress husband paruthiveeran priyamani tamilcinema
By Edward Jul 22, 2021 05:18 PM GMT
Edward

Edward

Report

பருத்திவீரன் படத்தில் நடித்து பெரியளவில் பேசப்பட்டும் அதற்கான தேசியவிருதினையும் பெற்றவர் நடிகை பிரியாமணி. இதையடுத்து படங்கள் சரியாக அமையாமல் இருந்தது. தற்போது வெப் சீரிஸ் படங்களில் போல்ட்டான கதபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கொட்டேஷன் கேங்’ என்ற படத்தில் நடித்து வரும் பிரியாமணி, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். தற்போது தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வரும் பிரியாமணி, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

எனக்கு வயதாகிவிட்டது. கறுப்பாக இருக்கிறேன். குண்டாகி விட்டேன் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்வது மிகவும் மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கின்றது. இப்படி யாரையும் தரக்குறைவாக பேசாதீங்க. கருப்பாக இருப்பதும் அழகு தான் என்று கூறி கஷ்டமாக கூறியுள்ளார். மேலும், பிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் முஸ்தபா ராஜ் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்து இவர்கள் இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆயிஷா தனது கணவரான முஸ்தபா ராஜ் 2 வது திருமணம் செல்லாது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதற்கு முஸ்தபா ராஜ் தனது குழந்தைகளின் செலவுகளுக்கு தவறாமல் பணம் அனுப்பி வருவதாகவும் ஆனால் ஆயிஷா தன்னிடமிருந்து பணம் பறிக்க தற்போது முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார். 2010ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் 2013ஆம் ஆண்டு விவாகரத்து வாங்கி உள்ளோம். ஆனால் நான் பிரியாமணியை திருமணம் செய்து 4 வருடங்கள் ஆகிறது.

தற்போது ஏன் விவாகரத்து செய்யவில்லை என குற்றம் சாட்ட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் என் குழந்தைகளுக்காக மட்டுமே நான் இத்தனை நாள் எதுவும் பேசாமல் இருந்ததாகவும் தற்போது நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் முஸ்தபா ராஜ் கூறியுள்ளார். இதுபற்றி பிரியாமணியிடம் இருந்து தகவல் அதிகாரபூர்வமாக கொடுக்கவில்லையாம்.