வெட்கத்தைவிட்டு வாய்ப்பு கேட்ட நடிகை!! கடைசிவரை நம்பவைத்து ஏமாற்றிய விஜய் தம்பி..
பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியாமணி. சில ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பில்லாமல் பாலிவுட் பக்கமும் வெப் தொடர்கள் பக்கமும் சென்றிந்தார்.
அதன்பின் ஷாருக்கான் - அட்லீ நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வரும் ஜவான் படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் நலன் விரும்பியாகவும் தன் அண்ணனாகவும் கருதி பல மேடைகளில் விஜய்யை புகழ்ந்து பேசி வந்தார்.
அதற்காக ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் படம் வெளியாகும் வரை எதிர்ப்பார்ப்போடு இருந்தனர். அதே எதிர்ப்பார்ப்பில் தான் நடிகை பிரியாமணியும் இருந்திருக்கிறார்.
அதாவது, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஷூட்டிங் சமயத்தில் தமிழ் சார்பாக விஜய்யும் தெலுங்கு சார்பாக அல்லு அர்ஜுனும் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.
அதை பிரியாமணியும் நம்பி, அட்லீயிடம் விஜய் நடிக்கிறார் என்றால் அவருடன் எனக்கு ஒரு சீனாவது கொடுங்கள் என்று வாய்ப்பை கேட்டுள்ளார். அட்லீயும் அதற்கு என்ன பண்ணிடலாம் என்று கூறி நம்ப வைத்துள்ளார்.
ஆனால் கடைசி வரை அதை நிறவேற்றாமால் ஏமாற்றியதால் அவர் மீது கோபம் தான் வந்ததாக கூறியிருக்கிறார் நடிகை பிரியாமணி.