பாலிவுட் நடிகைகளே பணம் குடுத்து அதை பண்றாங்க.. கடைசியா என்னையும்.. நடிகை பிரியாமணி கதறல்!!
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகை பிரியாமணி.
சமீபகாலமாக தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லை என்று இந்தி, தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார் பிரியாமணி.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியாமணி பாலிவுட் நடிகர், நடிகைகளில் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் ஏர்போர்ட், ஜிம், வாக்கிங் என எங்கு சென்றாலும் புகைப்படக்காரர்கள்அந்த இடத்திற்கு வந்த புகைப்படம் எடுக்கிறார்கள்.
ஆனால் எதற்காக என்னை மட்டும் இப்படி புகைப்படம் எடுப்பதில்லை என்று ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அந்த நபர், "நீங்கள் புகைப்படக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்" என்றார். மேலும் செல்லும் இடம் பற்றிய தகவல்களையும் சொல்ல வேண்டுமாம்.
நான் அந்த பிரபலங்கள் அப்படி செய்வது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இந்த விஷயம் எனக்கு தெரிந்த சமயத்தில் ஆச்சரியமாக இருந்தது பிரியாமணி கூறியுள்ளார்.