ஃபாலோ செய்து செல்ஃபி கேட்ட ரசிகர்!! அரங்கத்திலேயே அசிங்கப்படுத்திய நடிகை பிரியங்கா மோகன்..
பிரியங்கா மோகன்
கன்னட சினிமாவில் அறிமுகமாகி வாய்ப்பு பெற்று பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.
அதன்பின் எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பிரதர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.
இந்நிலையில் தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வெளியான சரிபோதா சனிவாரம் படத்திலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பிரதர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. அப்போது மேடைக்கு கீழ் உட்கார்ந்திருந்த போது ஒரு ரசிகர்கள் அனுமதியில்லாமல் செல்ஃபி எடுக்க கேட்டியிருக்கிறார்.
ஃபோலோ பண்ணி வரக்கூடாது
இதனால் கோபமடைந்த பிரியங்கா மோகன், இப்படியெல்லாம் ஃபோலோ பண்ணி வரக்கூடாது என்று மூஞ்சில் அடித்தது போல் அந்த இளைஞரை அசிங்கப்படுத்தி பின் செல்ஃபிக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பிரியங்கா மோகனை கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
PriyankaMohan's reply to the fan who has been continuously following her to take a selfie🤳 pic.twitter.com/H9HlkyueZn
— AmuthaBharathi (@CinemaWithAB) September 28, 2024