விஜே பாவனா விஜய் டிவியில் இருந்து வெளியேற பிரியங்கா காரணமா!! பிரபல தொகுப்பாளர்..
சின்னத்திரை தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சம்பவம் மணிமேகலை - பிரியங்கா பிரச்சனை. மணிமேகலை குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலக விஜே பிரியங்காவின் சில செயல்பாடுகள் தான் காரணம் என்று மறைமுகமாக கூறப்பட்டு வருகிறது.
இதற்கு பலர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பிரியங்காவிற்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதற்கிடையில் பிரியங்காவால் பல தொகுப்பாளினிகள் விஜய் டிவியில் இருந்து விலகிவிட்டார்கள் என்றும் அதில் முக்கியமானவர் விஜே பாவனா என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்தி வாசிப்பாளர்களான ரஞ்சித் மற்றும் அவரது மனைவி பிரியா ரஞ்சித் சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளனர். பிரியங்காவால் மற்ற தொகுப்பாளினிகள் விலகிவிட்டார்கள் என்று குறுவது உண்மை என்றும் சொல்லமுடியாது. பிரியங்காவால் தான் நான் விலகிவிட்டேன் என்று விஜே பாவனா பற்றி ஒரு செய்தி வந்தது.
இதனை அறிந்த பாவனா. அந்த செய்தியை பகிர்ந்தவரின் பெயரை குறிப்பிட்டு, இது நியாயமில்லை. என்னுடைய எதிர்காலத்திற்காக தான் மும்பைக்கு சென்று ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சேர்ந்தேன் என்று பாவனா விளக்கம் கொடுத்ததாக ரஞ்சித் கூறியிருக்கிறார்.
அதேபோல் டிடி கொடுத்த ஸ்பேஷ் தான் இப்போ பிரியங்கா 15 ஆண்டுகளாக விஜய் டிவியில் இருக்க முடிந்திருக்குமா என்று பிரியா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.