விஜய் கொடுத்த அவமானம்!! சிவகார்த்திகேயனுக்கு ஓகே சொல்லிட்டு, தளபதியை ஒதுக்கி வரும் நடிகர் நெப்போலியன்..
நடிகர் நெப்போலியன்
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். சில ஆண்டுகளுக்கு முன் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். உடல் நிலை சரியில்லாத அவரது மகனுக்காக அமெரிக்காவில் பல தொழில்களை ஆரம்பித்து நல்ல ஒரு தந்தையாக பெயர் எடுத்திருக்கிறார்.
அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்து மகனுக்கான எல்லாவற்றையும் செய்தோம். அப்போது அங்கே (இந்தியா) எனக்கு வேண்டாம், எல்லோரும் வீல் சேரில் இருப்பதை ஒருமாதிரி பார்க்கிறார்கள், இங்கே (அமெரிக்கா) அப்படி யாரும் பார்க்கவில்லை என்று கூறியதும் அரசியல் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டேன்.
விஜய்யுடன் ஏற்பட்ட பிரச்சனை
இந்நிலையில் பல ஆண்டுகளாக நடிகர் விஜய்யுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக அவருடன் நடிக்காமலும் கோபத்தில் இருந்து வருகிறார் நெப்போலியன். போக்கிரி படத்தின் போது ஷூட்டிங்கிற்கு நெப்போலியனின் அமெரிக்க நண்பர்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என்று கூற, அவரிடன் அனுமதி வாங்காமல் விஜய் கேரவனுக்கு கூட்டிச்சென்றுள்ளார் நெப்போலியன். உள்ளே இருந்த விஜய்யின் உதவியாளார் அவர்களை அனுப்ப அனுமதி இல்லை என்றும் சார் திட்டுவார் என்றும் நீங்கள் பிறகு வாங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
தன் நண்பர்கள் முன்னியில் இப்படியொரு சம்பவம் விஜய்யால் ஏற்பட்டதால் மன வேதனைக்கு ஆளாகி இருக்கிறார் நெப்போலியன். மேலும் சத்தம் போட்டதால் விஜய் வெளியில் வந்து நெப்போலியனை பார்த்து உங்களுக்கு வயசு ஆகிவிட்டது. சொன்னா புரிச்சிக்க மாட்டீர்களா என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தான் விஜய் உடன் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
பிரபுதேவாவும் படம் முடியும் வரை அமைதியாக இருங்கள் என்று நெப்போலியனை சமாதானம் செய்திருக்கிறார். ஆனால் விஜய் படம் முடியும் வரை நெப்போலியனிடம் முகம் கொடுத்து பேசவே இல்லையாம். சமீபத்தில் கூட ஒரு பேட்டியொன்றில், விஜய் படத்தை பார்ப்பது கிடையாது என்றும் அவர் என்னுடன் நடிக்க ஆசைப்பட்டால் எனக்கு நடிக்க ஓகே தான் என்று கூறியிருக்கிறார் நடிகர் நெப்போலியன்.