நயன்தாராவை போல் ஆகணும்னு ஆசை.. 17 வயது மாணவியை ஜூஸ் கொடுத்து சீரழித்த தயாரிப்பாளர்..

Gossip Today
By Edward Sep 22, 2022 10:22 AM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. அவரை பார்த்து பல இளம் நடிகைகள் ரோல் மாடலாக நினைத்து அவரை போல் ஆகவேண்டும் ஆசையில் சினிமாவில் நடித்து வருவார்கள்.

நடிகையாகும் கனவு

அப்படி அந்த ஆசை வார்த்தை கூறி 17 வயதில் ஒரு மாணவியை ஒருவர் சீரழித்துள்ள விசயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை அருகேயுள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகாரொன்றினை அளித்துள்ளார்.

சின்ன வயதில் நடிக்கும் ஆசையில் சினிமாவில் எப்படியாவது நடிகையாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார் அந்த மாணவி. அப்போது பேஸ்புக் பக்கத்தில் நடிக்க நடிகைகள் தேவை என்ற அறிவிப்பை பார்த்த அந்த மாணவி கால் செய்து பேசியிருக்கிறார்.

நயன்தாராவை போல் ஆகணும்னு ஆசை.. 17 வயது மாணவியை ஜூஸ் கொடுத்து சீரழித்த தயாரிப்பாளர்.. | Producer Who Made The College Student Pregnant

பலமுறை பலாத்காரம் செய்த தயாரிப்பாளர்

இதற்காக சென்னையில் இருந்து பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள விடுதியொல் நடபெற்ற நடிகைகளுக்கான ஆடிஷன் நடைபெற்றுள்ளது. பல பெண்களை பார்த்திபன் என்கிற தயாரிப்பாளர் தேர்வு செய்து வந்தார்.

அதன்பின் அந்த 17 வயது மாணவியை அழைத்து குளிர்பானம் கொடுத்துள்ளார். அதை குடித்து மயங்கி போன அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் பார்த்திபன். எழுந்த அந்த மாணவியிடம் இப்போது உனக்கு 17 வயதாகிறது, 18 வயதானதும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதன்பின் மாணவியை பலமுறை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால் கர்ப்பமாகிய மாணவியிடம், கர்ப்பமாகினார் நடிகையாக முடியாது என்று கூறி கர்ப்பத்தை கலைக்க சில மாத்திரைகளை வாழங்கி இருக்கிறார்.

பின், போகபோக அவர் அந்த மாணவியிடம் பேசுவதை நிறுத்தியிருக்கிறார் பார்த்திபன். நடிகையாக்குகிறேன், திருமணம் செய்கிறேன் என்று கூறி அந்த மாணவியை ஏமாற்றி விட்டதால், அந்த மாணவி புகாரளித்துள்ளார். தற்போது அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.