எப்படி வேணாலும் நடிக்க நான் ரெடி, ஆனா.. அதை பத்தி மட்டும் என் கிட்ட கேட்காதீங்க!! ஷாக் கொடுத்த நடிகை ராஷி கண்ணா..
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ராஷி கண்ணா. தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து நடித்து வந்த ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள் படத்திற்கு பின் அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்லக் தர்பார், அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது அரண்மனை 4 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வரும் ராஷி கண்ணா, ஒருசில முக்கிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
என்னால இப்படியொரு ரோல் பண்ண முடியாதுன்னு யோசிக்கவில்லை. இப்படியான ரோல் என்னால் பண்ணமுடியாது என்று நினைக்கவில்லை.
கதைக்கேற்ப அது சரியாக இருந்தால் அந்த ரோலில் நடிக்க நான் தயார் என்றும் எனக்கான ஒரு லிமிட் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், யாராவது என் கல்யாணத்தை பற்றி கேட்டால் அதை மட்டும் என்னிடம் கேட்கவே கேட்காதீங்க என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.