அந்தமாதிரி நடந்து கொண்ட தினேஷ்!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி கணவரை பிரிய முக்கிய காரணம்..

Bigg Boss Rachitha Mahalakshmi Tamil Actress Actress Dinesh Gopalsamy
By Edward Apr 04, 2024 02:30 PM GMT
Report

ஸ்டார் விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ஒருசில சீரியல்களில் நடித்து பிஸியாக இருந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ரச்சிதா, தினேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணம் பிரிந்துவிட்டார்.

அந்தமாதிரி நடந்து கொண்ட தினேஷ்!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி கணவரை பிரிய முக்கிய காரணம்.. | Rachitha Mahalakshmi Breakup With Husband Reason

அதன்பின் பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதா, எமோஷனல் சம்பவங்களை பகிர்ந்திருந்தார். அதன்பின் கணவருடன் இணைந்துவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், கணவர் தனக்கு டார்ச்சர் கொடுக்கிறார் என்று கூறி போலிஸில் புகாரளித்தார். பின் விலகிய தினேஷ், பிக்பாஸ் 7 சீசனில் கலந்து கொண்டு ரச்சிதாவிற்காக சில விசயங்களை செய்து வந்தார்.

பின் முற்றிலும் கணவர் தினேஷை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த ரச்சிதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வந்தார். சமீபத்தில் 60 வயதை தாண்டி நடிகர் ஜகதீஷுக்கு ஜோடியாக Ranganayaka என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தினேஷை, ரச்சிதா மகாலட்சுமி பிரிய முக்கிய காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்தமாதிரி நடந்து கொண்ட தினேஷ்!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி கணவரை பிரிய முக்கிய காரணம்.. | Rachitha Mahalakshmi Breakup With Husband Reason

தான் நடிப்பு மூலம் சம்பாதிக்கும் பணம் மொத்தத்தையும் கணவர் வீட்டாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அம்மாவிற்கு எந்த உதவியையும் செய்யக்கூடாது. பொருளாதார ரீதியில் தன்னை பெற்ற தாய்க்கு உதவக்கூடாது என்றும் கூறி தடுத்ததாலும் ரச்சிதா மனமுடைந்து கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். ரச்சிதா மகாலட்சுமியை பிரியாமல் இருக்க தினேஷ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

அப்படி இருந்தும் இருவருக்கும் இடையில் விரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்க, எப்படியாவது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட வேண்டும் என்ற காரணத்தால் தினேஷ் செய்யாத தவறை கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ரச்சிதா. இதன்பின் அவரை விட்டு பிரிய எனக்கு சம்மதம், விவாகரத்துக்கு அவர் விண்ணப்பிக்கலாம் என்று தினேஷ் கூறிய பேட்டியொன்று தற்போது வைரலாகி வருகிறது. இதையெல்லாம் துளிக்கூட கண்டுக்கொள்ளாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி.

You May Like This Video