நிறைய பேருடன் என் அப்பா தொடர்பில் இருந்தார்!! அம்மா பட்ட கஷ்டத்தை உடைத்த நடிகர் ராதா ரவி
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும் பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகனாவும் திகழ்ந்து கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகர் ராதா ரவி. தற்போது தமிழ் சினிமத்துறையிலும் அரசியலிலும் முக்கிய பொறுப்பில் இருந்தும் சில படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் தன்னுடைய அப்பாவுக்கும் எம் ஜி ஆருக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து ஓப்பனாக பகிர்ந்திருந்தார். தற்போது தன்னுடைய அம்மா பற்றி பகிர்ந்துள்ளார்.
ஐயாவுடன் நாங்க நெருங்குனது இல்லை, எங்க அம்மா தான் எல்லாரையும் வளர்த்தாங்க. பெரிய ஆச்சரியமாக பெண்மணி என்றால் என் அம்மா தான். எம் ஆர் ராதா என்ற விலாசம் இருந்தது என்றால் அதற்கு காரணம் என் அம்மாவால் தான். எங்க அப்பா வைத்திருந்த 4 பேர் 5 பேருக்கு வசதி எல்லாத்தையும் செய்து வைத்தார்.
நிறைய பேருடன் தொடர்பில் இருந்தார். எல்லாருக்கும் வீடு வாசல் எல்லாமே வாங்கி கொடுத்துவிடுவார். எல்லாருக்கும் திருமதி எம் ஆர் ராதா-ன்னு தான் விலாசம் இருக்கும். ஆனால், எல்லா பிள்ளைகளும் படித்தது இந்த தேனாம்பேட்டையில் தான். ராதிகா உட்பட எல்லாரும் இங்க இருந்திருக்காங்க, ராதிகா மறந்திருக்கலாம், நிரோஷா மறக்கவில்லை.
எல்லாரையும் நாங்கள் ஒரே குடும்பமாக பார்த்து வருகிறோம். நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். என் அம்மா இல்லை என்றால் எங்கள் அட்ரஸ்யே இருக்காது. அப்பா ஜெயிலில் இருந்த போது கஷ்டப்பட்டு வளர்த்தது என் அம்மா.
ஒரு இடத்தில் கூட எம் ஆர் ராதாவின் மனைவி என்று கூறமாட்டார். வீட்டில் இருந்த 18 காரையும் வித்தாங்க எங்க அம்மா. சைக்கிளில் நான் ஒரு முறை போகும் போது, அப்பாவை பார்க்க ஜெயிலுக்கு நடந்து போனாங்க எங்க அம்மா. கூட இருக்கவங்க யாரும் உதவவில்லை. என்று ராதா ரவி ஓப்பனாக பேசியிருக்கிறார்.