டிடி பலிஆடு.. சுனாமியில் உயிர் தப்பியது இப்படித்தான்... நடிகை ராதிகா ஓப்பன் டாக்..

Raadhika Tsunami Dhivyadharshini
By Edward Sep 27, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ராதிகா ஒருசில படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து, படங்களை தயாரித்தும் வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நானும் ஸ்ரீபிரியாவும் தொகுப்பாளினி டிடி-யின் காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது டிடியை நாங்கள் பலி ஆடாக ஆக்கிவிட்டோம். அதுபோல எனக்கு டிடியோடு இன்னொரு சம்பவம் இருக்கிறது.

டிடி பலிஆடு.. சுனாமியில் உயிர் தப்பியது இப்படித்தான்... நடிகை ராதிகா ஓப்பன் டாக்.. | Radhika Talked About Many Unforgettable Thing Dd

செல்வி சீரியல் ஷூட்

டிடி-ஐ முதன்முதலில் நான் தான் சின்னத்திரையில் அறிமுகம் செய்தேன். செல்வி சீரியல் ஷூட்டிங்கிற்காக இலங்கைக்கு சென்று கண்டியில் ஷூட் செய்துவிட்டு கத்தறகம்மாவில் ஷூட் எடுக்கும் போது முதலில் கோவிலில் ஷூட் எடுத்து பின் மலை உச்சிக்கு செல்லலாம் என்று நான் எடுத்த முடிவுதான் அனைவரையும் காப்பாற்றியது.

நாங்கள் நினைத்த மாதிரி ஷூட்டிங் முடித்து அன்றுதான் கடைசி ஷூட்டை முடித்து ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவு செய்தபோது, எனக்கு மட்டும்தான் ஷூட்டிங், அதற்கு முந்தைய நாள் டிசம்பர் 25 ஆம் தேதி என் அண்ணன் வீட்டில் எங்களுக்கு ஒரு டின்னர் ரெடி பண்ணி இருந்தாங்க. எல்லோரும் அங்கு முடிச்சுட்டி காலையில் ஷூட்டிங் போகிறோம்.

டிடி பலிஆடு.. சுனாமியில் உயிர் தப்பியது இப்படித்தான்... நடிகை ராதிகா ஓப்பன் டாக்.. | Radhika Talked About Many Unforgettable Thing Dd

சுனாமியில் உயிர் தப்பியது

அப்போது கடற்கரை ஓரமாக போகும் போது கடலில் நிறைய பறவைகள் பறந்துட்டு இருந்தது. வழக்கத்திற்கு மாறா தண்ணி உள்ளே இருந்தது. எனக்கு மனதில் ஏதோ தோன்றியதால் சூட்டிங்கிற்கு சென்று அங்கு இருந்த எல்லா நடிகைகளையும் நீங்கள் கிளம்புங்க, நான் ஷார்ட் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொன்னேன்.

ஆனால் என் கணவர் எர்த் க்யூக் என்று சொன்னதும் எனக்கு புரியவில்லை. இங்கிருந்து கிளம்பலாம் என்று கூறிக்கொண்டு இருக்கும் போது வந்தது பாருங்க தண்ணி.. அப்படி ஆர்ப்பரிச்சு வந்தது. நல்லவேளையாக மற்றவர்கள் எல்லாம் இன்னொரு பஸ்ஸில் போய்விட்டதால் நான் தண்ணீரை பார்த்ததும் வண்டியை எடு என்று கத்தினேன்.

எப்படியோ டிரைவர் மேலே போவதற்கு ஏற்ப ஏறிவிட்டார். பின் பிளைட் கேன்சல் ஆனது. அந்த சமயத்தில் என்னிடம் டிடி, மேடம் எனக்கு கல்யாணம் கூட ஆகல, இப்பவே நான் செத்துப்போகணுமா? ரொம்ப பயமா இருக்கும் மேடம் என்று அழுதுட்டி இருந்தாங்க. நான் யாரும் சாக மாட்டோம் என்று ஆறுதல் கூறி ஒருவழியாக அனுப்பி வைத்தேன் என்று ராதிகா அந்த அனுபவத்தை கூறியிருக்கிறார்.