ரூமுக்கு அழைத்து கம்பெனி கொடுக்க கூப்பிட்டார்!! ரஜினி நடந்து கொண்ட ரகசியம்!! பிரபல நடிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஆரபகாலக்கட்டதில் மது குடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார். பட ஷூட்டிங்கில் புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் வைத்திருந்தார். ஒரு ஹோட்டலில் அவருக்கென தனி அறை இருந்துள்ளது. ஷூட் முடிந்து தினமும் சரக்கு அடிக்க சக நடிகர்கள் யாரையாவது கம்பெனிக்கு கூப்பிடுவாராம்.
ஆனால் தற்போது ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமானதால், மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார். இதை பல மேடைகளில் ரஜின்காந்தே கூறியிருக்கிறார். இந்நிலையில், வெண்ணிற ஆடை மூர்த்தி, சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் இந்தியா வந்தவர், பேட்டியொன்றில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பற்றிய ரகசியம் ஒன்றை வெளிப்படையாக பேசியுள்ளார். ஒரு படத்தில் மைசூரில் நடித்த போது, ஷூட் முடிந்து மாலை என்ன செய்வீர்கள் என்று ரஜினி கேட்டார்.
அறையில் சும்மாதான் இருப்பேன் என்றும் மது அருந்துவேன் என்றும் கூறினேன். உடனே, மாலை ரெடியாக இருங்கள் என் ரூமுக்கு வாங்கள், கார் அனுப்புகிறேன் என்றார். மாலை கார் வந்து அவர் ரூமுக்கு சென்றேன். அவரே கதவை திறக்க, குடித்துவிட்டு பல விசயங்கள் பேசினோம் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியுள்ளார்.
மேலும், ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கி கொடுத்து அவரே என் ரூமிற்கு அழைத்து கொண்டு விட்டுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.