அந்த நடிகை தான் வேண்டும்.. ஆசையுடன் அடம் பிடித்த ரஜினிகாந்த்..
ரஜினிகாந்த் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரம். இவருடன் இணைந்து நடிக்க வரிசையில் பலரும் காத்திருக்க, நடிகர் ரஜினிகாந்துக்கு பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்யுடன் ஜோடியாக நடிக்க வேண்டுமென ஆசை இருந்துள்ளது.
நான்கு முறை ஐஸ்வர்யா ராய்யுடன் இணைந்து நடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த நான்கு முறையும் ரஜினி படங்களை நிராகரித்துவிட்டாராம் ஐஸ்வர்யா ராய். முதலில் படையப்பா திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்துவிட்டார்.
பின் பாபா திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஐஸ்வர்யா ராய்யை கேட்டுள்ளார் ரஜினி. அப்போதும் ரஜினிக்கு ரெட் சிக்னல் காட்டிவிட்டார் ஐஸ்வர்யா. இதன்பின், சந்திரமுகி மற்றும் சிவாஜி ஆகிய இரு திரைப்படங்களிலும் ஐஸ்வர்யா ராய் தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டாராம் ரஜினி. ஆனால், இந்த இரு திரைப்படங்களிலும் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார் ஐஸ்வர்யா.
கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படத்தில் தான் ரஜினியுடன் இணைந்து ஜோடியாக நடிக்க ஓகே என கூறினார் ஐஸ்வர்யா ராய். எந்திரன் படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ரஜினியின் ஆசையும் நிறைவேறிவிட்டது.