இந்த வயசுலையும் நிம்மதியா இருக்க முடியல!! நடுரோட்டில் கதறிய ரஜினிகாந்த் பக்கத்து வீட்டு பெண்
உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்தவகையில் அவரை எப்படியாவது காண வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினி எங்கு சென்றாலும் சென்று ரசிகர்கள் கூட்டமாக நிற்பார்கள்.
அப்படி ரஜினிகாந்த் வீட்டு வாசலுக்கே சென்று ரசிகர்கள் அவரை காண ரோட்டில் மணிக்கணக்கில் நின்று தலைவா என்று கூச்சலிட்டபடி நிற்பார்கள். இது தொடர்ந்து நடந்து வருவதை பார்த்த ரஜினிகாந்த் வீட்டின் பக்கத்து வீட்டு பெண் நடுரோட்டிற்கு வந்து புலம்பி இருக்கிறார்.
எல்லா பண்டிக்கைக்கும் ரசிகர்கள் வந்து தலைவா என்று சத்தம் போடுகிறீர்கள். நல்ல நாளில் கூட எங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா என்று கண்டபடி திட்டியிருக்கிறார்.
மேலும், திரு.ரஜினிகாந்த் அவர்கள், முக்கியமான நாட்களில், கல்யாண மண்டபம் அல்லது பண்ணை வீடுகளில் ரசிகர்களை சந்தித்தால், பொது மக்களுக்கு தொந்தரவு ஏதும் இருக்காது. நாங்களும் வரி கட்டுகிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு முக்கியதுவமும் கிடையாது என்று கத்திருக்கிறார்.
