திருமணமாகிவிட்டா இப்படியெல்லாமா கேட்பீங்க!! கடுப்பாகி பதிலடி கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்...
கன்னட சினிமாவில் கில்லி படத்தில் நடித்து அறிமுகமாகி தமிழில் 2012ல் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், இந்தி படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு வந்த ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு பின் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2021ல் ரகுல் ப்ரீத் சிங் பிரபல தயாரிப்பாளர் ஜக்கி பாக்னானி என்பவருடன் ரகசியமாக காதலில் இருந்து, பின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பின் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி ரகுல் ப்ரீத் சிங், ஜக்கி பாக்னானியை திருமணம் செய்து கரம்பிடித்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திற்கு பல முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரகுல், கிளாமர் ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்வதுண்டு.
திருமணத்திற்கு பின்பும் குறையாத கவர்ச்சியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரகுல் ப்ரீத் சிங்கிடம், திருமணத்திற்கு பின் ஆடை அணிவதில் எதாவது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், இந்திய சமுதாயத்தில் திருமணம் பற்றி மிகப்பெரிய கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம் என்றும் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் மிக இயல்பான விசயமாக திருமணம் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆண்களுக்கு திருமணத்திற்கு பின் இப்படித்தான் ஆடையணிய வேண்டும் கட்டுப்பாடுகள் இருக்கிறதா?
அப்படி இருக்கும் போது பெண்களிடம் மட்டும் ஏன் அதை எதிர்ப்பார்க்கிறீர்கள். நானும் என் கணவரும் 90 சதவீதம் ஒத்துப்போகிறோம், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருந்ததோ திருமண வாழ்க்கையும் அப்படியே எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக செல்கிறது என்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருக்கிறார்.