விஜய்யை சந்தித்து பேசியது இதற்கு தான்!! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரம்பா..
வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாத்துறைக்கு காலெடி எடுத்து வைத்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து டாப் கதாநாயகியாக ஜொலித்தவர் நடிகை ரம்பா. சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி கணவர், குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் இந்தியா பக்கம் வந்து கணவர் ஆரம்பித்த தொழிலை பார்த்து வருகிறார்.
சமீபத்தில் தன் குடும்பத்துடன் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதுகுறித்து இணையத்தில் பலவிதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், ரம்பா விஜய்யை சந்தித்தது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், என் குழந்தைகள் விஜய்யை பார்க்க ஆசைப்பட்டதால், மேனேஜரை தொடர்பு செய்து விஷயத்தை கூறியதாகவும் உடனே விஜய் நேரம் ஒதுக்கி என் குழந்தைகளுடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக சந்தித்தார் என்று கூறியிருக்கிறார்.
மேலும் என் குழந்தைகளுடன் நீண்ட நேரம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவருடன் நடித்த காலங்களில் மிகக்குறைவாக பேசுவார். லியோ படத்திற்கு பின் விஜய்யின் ரசிகராக என் மகன் மாறிவிட்டான், அதனால் தான் விஜய்யை சந்தித்தோம் என்று கூறியிருக்கிறார்.