ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை!! வெளியான தகவல்..
மறைந்த ரத்தன் டாடா
டாடா குழுமத்த்தின் முக்கிய அங்கமாக திகழ்ந்து மிகப்பெரிய வளர்ச்சியையும் நல்ல மனிதர் என்றும் சம்பாதித்தவர் ரத்தன் டாடா.
நேற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில் நேற்று இரவும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மண்ணைவிட்டு மறைந்துள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ரத்தன் டாடாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க காதல்
அமெரிக்காவில் படித்த ரத்தன் டாடா, அங்கு ஒரு பெண்ணை விரும்பியிருக்கிறார். தன்னை வளர்த்த பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் இந்தியாவுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டதால் அட்ந்ஹ பெண்ணையும் இந்தியாவுக்கு வரவழைத்தார்.
ஆனால் அந்த சமயத்தில் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. இதை அமெரிக்க ஊடங்கங்கள் பெரிய போராக சித்தரித்தது. இதனால் பயந்து போன அந்த அமெரிக்க பெண் ரத்தன் டாடாவை திருமணம் செய்ய மறுத்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அவரின் முதல் காதல் இப்படி தான் தோல்வியில் முடிந்துள்ளது.
நடிகையுடன் காதல்
இதனையடுத்து பிரபல பாலிவுட் நடிகை சிமி கரேவாலுடன் காதல் ஏற்பட இருவரும் ஆழமான அன்பை கொண்டிருந்தாலும் இருவரின் திருமணம் திருமணத்தில் முடியவில்லை. இதற்கு முன் சிமி சிலருடன் காதல் உறவில் இருந்து தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
4 காதல் தோல்வி
ஏன் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டபோது அதற்கு ரத்தன் டாடா, நான்கு முறை திருமணம் செய்யும் நிலைக்கு சென்று கடைசியில் அவை நின்று போனதாகவும் எனக்கு மொத்தம் நான்கு காதல் தோல்விகள் உள்ளது என்றும் சிரித்துக்கொண்டே வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதனால் தளர்ந்து போகாமால் முன்னேற்றத்தை மட்டும் மூச்சைக்கொண்டு இப்படியொரு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பி தற்போது மண்ணைவிட்டு சென்றிருக்கிறார் ரத்தன் டாடா.