17 வருடங்களாக காத்திருந்த கேமரா மேன்.. பாலிவுட்டை அதிரவைத்தவருக்கு அடித்த ஜேக்பாட்

A R Rahman Ponniyin Selvan: I Mani Ratnam
By Edward Sep 27, 2022 03:15 PM GMT
Edward

Edward

Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வரும் செப்டம்பர் 30 ஆம்தேதி வெளியாகவிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையில் ரவி வர்மா ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு கேட்ட ஒளிப்பதிவாளர்

இப்படத்தின் பிரமோஷனுக்காக அப்படத்தில் வேலை செய்தவர்கள் நட்சத்திரங்கள் உட்பல பலர் பேட்டிகொடுத்தும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்கள். அந்தவகையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி வர்மா மணிரத்னம் பற்றிய சில விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். Five Star படத்தில் பணியாற்றி இருந்த போது மணிரத்னம் அவர்களிடம் வாய்ப்பு கேட்டு சென்றிருந்தேன்.

15 வருட உழைப்பு

20 வருடங்களுக்கு முன் அப்படி கேட்டதற்கு பாரட்டி அனுப்பினார். அப்போது என் வேலையை பார்த்து அவரே கூப்பிட வேண்டும் என்று நினைதேன். அதன்பின் அந்நியன் படத்தில் கமிட்டாகி பணியாற்றினேன். இதனை தொடர்ந்து 15 வருடங்களாகியது பொன்னியின் செல்வன் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது என்று எமோஷ்னலாக கூறினார். பாலிவுட்டில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார் ரவி வர்மா.