கண்ட இடத்துல தட்டுவான் வெங்கட் பிரபு.. பிரேம்ஜி, வைபவ் செய்த செயல்!! பிரபல நடிகர் ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் 80களில் நடிகராக நடிக்க ஆரம்பித்து 90ஸ் காலத்தில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிகாந்த். இயக்குனர் வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்த ரவிகாந்த், நடிகை அம்பிகாவை 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி இரு ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2002ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், வெங்கட் பிரபு படங்களில் நடித்தது பற்றி பகிர்ந்துள்ளார். பல ரோலில் நடிக்க கூப்பிட்டு 11 ரோலில் நடிக்க வைத்துவிட்டார்.
அதன்பின் லேடி கெட்டம் ஒன்றில் நடிக்க வைத்து மொத்தம் 12 கெட்டப்பில் நடிக்க வைத்து படாதபாடு படுத்திவிட்டார். லேடி கெட்டப் போடும் போது வைபவ், பிரேம்ஜி என்னை இஷ்டத்துக்கு பின்னால் தட்டுவாங்க. மேலும் வெங்கட் பிரபுவும் சில நேரங்களில் கண்ட இடத்துல கை வச்சு தட்டிட்டு போவான்.
என்னை வாயை திறக்கவே வேண்டாம் என்று பிரபு சொல்லிவிட்டார். அதன்பின் ஷூட் முடிந்து ஆடையை எடுத்தப்பின் தான் நான் ஆண் என்று அவர்களுக்கு தெரிய வந்தது என ரவிகாந்த் தெரிவித்துள்ளார்.