கோவைக்கு படையெடுத்த முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ்!! அதுவும் 40 கார்கள் 4 விமானங்களின் துணையோடு...
உலகத்தில் பணக்காரர்கள் வரிசையில் டாப் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, தன் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடத்தி முடித்தார். பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருமணத்திற்கு பல ஆயிரம் கணக்கில் செலவு செய்துள்ளார் அம்பானி. பெரும்பாலும் அம்பானி மும்பை மாகாணத்தில் செல்ல கார்கள் படையுடன் தான் செல்வார்.
அந்தவகையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக முகேஷ் அம்பானியின் மகன் ஆகேஷ் அம்பானி கோயம்பத்தூருக்கு தன்னுடைய மனைவி ஸ்லோகா மேத்தாவுடன் சென்றுள்ளார். அவரின் வருகைதான் தற்போது இணையத்தில் பெரியளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கர்நாடகாவை சேர்ந்த பிராந்தர் தாஸ் என்ற பெரிய தொழிலதிபரின் மகன் கோகுல் தாஸ் என்பவருக்கும் கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் ரவி - சித்ரா தம்பதியின் மகள் நிக்கி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்திற்குத்தான் ஆகாஷ் அம்பானி கலந்து கொண்டிருக்கிறார்.
தன் நண்பர்களுடன் திருமணத்தில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து தனக்கான பாதுகாப்பு வீரர்கள் உட்பட 4 விமானங்களிலும் 40 கார்களிலும் வந்திறங்கி இருக்கிறார். கோவைக்கு வந்ததும் ஈஷா மையத்திற்கு சென்ற ஆகாஷ் அம்பானி அங்கிருந்த முத்திப்பாளையம் அருகே இருக்கும் தனியார் சொகுசு விடுதியில் தங்கினார்.
செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை தன் மனைவி ஸ்லோகா மேத்தாவுடன் அங்கிருந்து திருமணத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.