நடுவீட்டில் மாமனார் முன் செய்ற காரியமா இது! விவாகரத்தானதை மறந்த நடிகை அமலாபால்..
தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாகினார்.
இந்நிலையில் கணவர் ஏ.எல். விஜய்யை ஏன் விவாகரத்து செய்தார் அமலாபால் என்ற காரணம் வெளியாகியுள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால் 2 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணத்திற்கு முன்பே அமலாபாலுக்கு மது, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததை தெரிந்துதான் ஏஎல் விஜய் திருமணம் செய்து கொண்டார்.
அதை திருமணத்திற்கு பிறகும் அமலாபால் விடவில்லை. ஒரு நாள் அமலா பால் நடுவீட்டில் புகைப்பிடித்ததை மாமனார் ஏ.எல். அழகப்பன் பார்த்துள்ளார். இதுபற்றி கேட்ட மாமனாரிடம் இப்படித்தான் இருப்பேன், என் இஷ்டம் உங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது என்று விவாதத்தில் ஈடுபட்டுள்ளாராம்.
இதனால் அப்பாவிற்கு மகனுக்கும் சண்டை பல முறை வந்துள்ளதாம். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விஜய் அமலாபாலை விவாகரத்து செய்து பிரிந்துள்ளார்.
விவாகரத்துக்கு பின் அமலாபால் அதையெல்லாம் மறந்து பார்ட்டி, நடிகர்களின் சவகாசம் என்று ஆளே மாறினார். இடையில் ஆடை படத்தில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டினை இழந்தார்.
அதை மீண்டும் பிடிக்க க்ளாமர் கலந்து நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு நடிகருடன் நெருக்கமாக இருந்தது தான் முழு காரணமே என்று ஏஎல் அழகப்பன் ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.