எப்படி இருந்த நடிகை இப்படி ஆகிட்டீங்களே? நடிகை ரீமாசென்னின் மகனா இது!
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி வருபவர்கள் 90களில் இருந்தே காணப்படுகிறது. அந்தவகையில் ஒரு மாடலாக இருந்து பெங்காளி படங்களில் நடித்து பின் தமிழில் மின்னலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரீமா சென்.
மிகப்பெரிய ஹிட் கொடுத்த இப்படத்தின் மூலம் பகவதி, தூள், எனக்கு 20 உனக்கு 18, செல்லமே, கிரி, ரெண்டு போன்ற படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகையாகினார். இதைதொடர்ந்து சிம்புவின் வல்லவன், கார்த்திகின் ஆயிரத்தில் ஒருவன், ராஜபேட்டை போன்ற படங்கள் மூலம் பிரபலமாகினார்.
இதையடுத்து 2012ல் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின் ருத்ரவீர் என்ற மகனை 2013ல் பெற்றெடுத்தார். தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறி குண்டாகியுள்ளார்.
அவர் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து வளர்ந்த மகன் ருத்ரவீர் புகைப்படமும் வெளியிட்டுள்ளார் ரீமா சென்.