இவ்வளவு டார்ச்சரை அனுபவித்தாரா ஜெயம் ரவி!! ஆர்த்தியின் சுயரூபத்தை வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம்..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்த விஷயம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பாடகி ஒருவர் தான் என்று கூறப்பட்டு அவரும் அதற்கான விளக்கத்தை அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆர் ஜே ஷா
இந்நிலையில் ஜெயம் ரவி குறித்து பல தகவல்களை ஆர் ஜே ஷா தன்னுடைய யூடியூப் பக்கத்தில் விவரித்துள்ளார். தன்னை ஜெயம் ரவி தரப்பில் சந்திப்பதாக கூறியதால் அவரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், நான் சட்டரீதியாக பிரிவதாக கூறி இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பிவிட்டேன்.
அதை வாங்கி கையெழுத்தும் போட்டார்கள், அதன்பின் தான் விவாகரத்து அறிக்கையை வெளியிட்டேன். ஆனால் அவர் எனக்கு இதுபற்றி தெரியாது என்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு போய்விட்டார் என்று கூறினார். செப்டம்பர் 9 ஆம் தேதி அறிக்கை வெளியிடுவதற்கு முந்தின இரண்டு நாட்கள் குழந்தைகள் என்னோடு என் குடும்பத்தோடுதான் இருந்தார்கள்.
சின்ன பையனுடன் அப்போது இதுபற்றி பேசவில்லை, பெரிய பையனிடம், நானும் அம்மாவும் பிரிந்துவிடுகிறோம் என்று சொன்னேன். அதற்கு அவன் உன் சந்தோஷம் முக்கியம் அப்பா, ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தீங்க என்றால் அது எனக்கு சந்தோஷம் என்று கூறினான். எல்லாம கொஞ்சநாள் மாறிவிடும், நான் உங்களை பார்க்காமல் இருக்கமாட்டேன் என்று சமாதானப்படுத்தினேன். அதன்பின் தான் விவாகரத்து அறிக்கை வெளியிட்டேன்.
ஆர்த்தியின் சுயரூபம்
ஜூன் மாதம் என் பையனுடைய பிறந்தநாள், ஆர்த்தி எல்லோரும் கொண்டாடினோம். ஆகஸ்ட் மாதம் இன்னொரு பையனுக்கு பிறந்தநாள் ஐடிசி ஹோட்டலில் காத்திருந்தேன், ஆனால் குழந்தைகள் யாரும் வரவில்லை. அவர்கள் குழந்தைகளோடு ஸ்ரீலங்கா சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன்.
அப்படி இருக்கும் போது நான் குழந்தைகளை தவிக்கவிட்டு போய்ட்டேன் என்று சொல்வது சரியான விளக்கம் கிடையாது என்று ஜெயம் ரவி கூறியதாக ஆர்ஜே ஷா தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 13 வருடங்களாக எனக்கென்று தனியான வங்கி கணக்கு இல்லை. எனக்கும் ஆர்த்திக்கும் joint account தான் இருக்கிறது. அவருக்கென மூன்று கணக்கு இருக்கும்.
அவர்கள் என்னவேண்டுமானாலும் செலவு செய்யலாம், நான் செலவு செய்தால் பல கேள்வி கேட்பார்கள். ஷூட்டிங்கில் இருக்கும் போது வீடியோ கால் செய்து சந்தேகப்பட்டு பல கேள்விகள் கேட்பார்க்ள். இப்படி பல நெருக்கடிகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இந்த கோபம் எப்போது வெடிக்க ஆரம்பித்தது என்றால், மூன்று படங்கள் அவர் அம்மாவுக்காக பண்ணினேன்.
முதல் படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் டீசண்ட் ஆன படமாக இருந்தது. ஆனால் அது நஷ்டம் என்று சொன்னார்கள். அடுத்து பூமி படமும் நஷ்டம் என்று கூறினார்கள். மூன்றாவதாக சைரன் என்ற படம் தோல்வியின் போது, பல கேள்விகள் எழுந்தது. ஆனால் மூன்று படமும் நல்ல வியாயபாரம் தான் ஆகியுள்ளது.
நான் சம்பாதித்த காசில்
ஏன் இப்படி நஷ்டக்கணக்கு காட்டினார்கள் என்று எனக்கு தெரியாது. இதுபற்றி அவர்களிடம், எல்லாமே உங்கள் பேரில் தான் இருக்கிறது. நான் சம்பாதித்த காசில் வாங்கிய வீடு, கார் எல்லாமே உங்க பேரில் தான் இருக்கிறது, 6 காரில் 4 கார் உங்க பேரிலும் 2 கார் என் பேரிலும் இருக்கு. அப்படி இருக்கும் போதுதான் கோபம் அதிகமாக நண்பர்கள் வீட்டிற்கு சென்றேன். அங்கு பல நெருக்கடி கொடுக்கப்பட்டது.
மேலும் என்னிடம், எங்களுக்குள் காதல் இருந்தது ஷா, அடுத்த மூணு வருஷம் என்ன நடந்தது என்று தெரியாது, குழப்பத்தில் தான் போய் கொண்டிருந்தது. கடைசி 2 வருடம் அந்த வீட்டில் எனக்கு கொடுக்கப்பட்ட மரியாதை இல்லை. ஒரு வார்த்தை கூறி என்னிடம் கூறினார், அதை இங்கு சொல்லவிரும்பவில்லை.
வேலைப் பார்க்கிறவர்கள் இருக்கும் போது அவர்கள் முன் திட்டுவார்கள். அதனால் தான் நான் வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அதன்பின் தான் சோசியல் மீடியாவில் அவர்கள் காட்டும் ஈகோவை நானும் காட்டினேன் என்று ஜெயம் ரவி உருக்கமாக கூறியதாக ஆர்ஜே ஷா தெரிவித்துள்ளார்.