திருமணமாகி 6 வருடத்தில் விவாகரத்து.. மகன் இருக்கையில் ரகுவரனை பிரிய இதான் காரணம்!!

Raghuvaran Rohini
By Edward Jul 22, 2022 07:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வில்லனாக கருத்தப்பட்டவர் நடிகர் ரகுவரன். 1996 ஆம் ஆண்டு நடிகை ரோஹினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரகுவரன். அதன்பின் ஒரு மகன் பிறந்த நிலையில் 6 வருட திருமண வாழ்க்கைக்கு விவாகரத்து மூலம் முற்றுபுள்ளி வைத்தனர்.

விவாகரத்தான் 4 வருடம் கழித்து உடல்நலக்குறைவால் ரகுவரன் மரணமடைந்தார். தற்போது தன் மகன் சாய் ரிஷிவரனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் நடிகை ரோஹினி. சமீபத்தில் ரகுவரனை 6 வருட திருமண வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் அவரை ஏன் விவாகரத்து செய்தேன் என்ற விளக்கத்தையும் சமீபத்தில் அளித்த மேடைப்பேச்சில் கூறியுள்ளார்.

எல்லா பெண்களுக்கு திருமணத்திற்கு பின் நடப்பது தான் எனக்கும் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின் பெண்களுக்கு சுந்தந்திரம் என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அப்படி போராடும் பெண்களின் கேரக்டரை தப்பாக பேசும் உலகம் தான் இது. அதை சமாளித்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.

அந்தவகையில் இதில் இருந்து வெளியே வந்த நான் இதை கூற இத்தனை வருடங்கள் தேவைப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், பொருளாதார சுதந்திரம் இருந்த எனக்கு இவ்வளவு குடும்ப வன்முறை இருந்தது என்றால் பொருளாதார ரீதியாக சுதந்திரம் இல்லாத பெண்களுக்கு என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்.

ரகுவரன் படத்தில் வில்லனாக நடிப்பதில் மெனக்கெட்டு நடிப்பார். அதை தான் வீட்டிலும் செய்வார். அதாவது, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரகுவரன் அதேபோன்று வீட்டிலும் நடிந்து கொள்வதால் பல பிரச்சனைகள் எங்களுக்குள் தோன்றியுள்ளது. ரகுவரன் மட்டுமில்லாது அவர் குடும்பத்தினராலும் நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.